Saturday, August 16, 2008

காதல் ஜோக்ஸ்...

காதலி: கல்யாணத்துக்கு முன்னாடி நாம தியேட்டருக்கு வர்றது தப்பில்லையா ராமு?
காதலன்: என்ன பேசற நீ? கல்யாணத்துக்கு அப்பறம் இப்படி வந்து உன் பக்கத்துல உட்கார்ந்தால் உன் புருஷன் உதைக்க மாட்டானா?
-------------------

“என் காதலி குற்றால அருவி மாதிரி”
“குளு குளுன்னு இருப்பாளா?”
“இல்லை. தலையிலேயே கொட்டுவா”
---------------------------


ஒருத்தி: 10 வருஷத்துக்கு முன்னே என்னைக் காதலித்துக் கை விட்டவரை இப்பக் கல்யாணம் பண்ணி இருக்கேன்.
மற்றொருத்தி: “என்ன இருந்தாலும் உனக்குப் பழி வாங்குற உணர்ச்சி ஜாஸ்திதான்!”
------------------------


“பில்லை நானே கொடுக்கிறேன்னு சொன்ன என் காதலியை நம்பி ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனது தப்பாப் போச்சு.”
“ஏன்?”
“பில்லை நான் கொடுக்கிறேன். பணத்தை நீ கொடுத்துடுனு கடைசியில சொல்லிட்டாள்.”

4 comments:

முகுந்தன் said...

நான் உங்களுக்கு ஒரு வேலை வைத்திருக்கிறேன் ... வந்து பாருங்கள்

Karthik said...

//இல்லை. தலையிலேயே கொட்டுவா

Punch Priya??
:)

FunScribbler said...

சூப்பர் ஜோக்ஸ்!!:) காலேஜ் எப்படி போகுது?

J J Reegan said...

// “பில்லை நானே கொடுக்கிறேன்னு சொன்ன என் காதலியை நம்பி ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனது தப்பாப் போச்சு.”
“ஏன்?”
“பில்லை நான் கொடுக்கிறேன். பணத்தை நீ கொடுத்துடுனு கடைசியில சொல்லிட்டாள்.” //

இது உலகத்துக்கே தெரிஞ்சதுதான....