Wednesday, June 11, 2008

எங்கோ படித்தது........'மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் '

எளிதாக காதல் வயப்படுபவனும் ஆண்தான்
மறக்காமல் தாடியோடு உலாத்துபவனும் ஆண்தான்.

பெண் எளிதாக காதல்வயப்பட மாட்டாள்,
அப்படியே அவனை இழந்தாலும் மனதை எளிதாக மாற்றிக்கொண்டுவிடுவாள்

பெண் திருமணத்திற்கு பிறகுதான் கணவனோடு மிகவும் பாசமோடு இருக்கிறாள்.. ஆனால் திருமணத்திற்கு பின் ஆணின் கேஸ் உல்டா ஏன் திருமணதிற்கு பிறகு ஆண்கள் முன்பு மாதிரி அன்பை பொழிவதில்லை?

எனக்கு தெரிந்து அப்படி ஒரு கபிள் இருக்கிறார்கள், திருமணதிற்கு முன் அவர் தன்னைப் பற்றி உருகி உருகி எழுதும் கவிதைகளை என்னிடம் காண்பிப்பார் ஒரு தோழி. இப்பொதெல்லாம் எரிந்து எரிந்து விழுகிறாராம்.

ஆண் வண்டைப்போல... இயற்கையிலேயே அவனின் குறிக்கோள் ஒன்றுதான்... மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள் என நம் பெரியோர்கள் சும்மாவா சொன்னார்கள்...அது ஆணுக்குதான் கச்சிதமாக பொருந்தும், பெண்ணிற்கு அல்ல

ஆனால் பெண் இயற்கையாகவே.. யாரிடம் தன்னை இழந்தாளோ, அவனிடம்தான் பாசம் இருக்கும்..

ஆனால் ஆண் அப்படியல்ல, அடுத்ததை தேடும் குணம் அவனது
உண்மையும் கூட சிலர் ஒத்துக்கொள்வார்கள் பலர் அறிந்துகொண்டும் மறுப்பார்கள்.

சில பெண் வண்டுகளும் இருக்கு.

இந்த ஹார்மோன்கள் எல்லாம் கலந்து செய்யும் கலகம்தான் மனிதனை காதல் ..கீதல் ...என்று பிதற்ற வைக்கிறது

காதல் உண்ர்வுபூர்வமானது மட்டுமே!
அறிவு பூர்வமானதென்றால் எப்படி காதலிக்க முடியும் அவன் அவன் உருப்புடுற வேலைய பாக்க போயிட மாட்டான்?

காமம்தான் காதலின் அஸ்திவாரம்...பாசம், பந்தம், நேசம், விட்டுக்கொடுத்தல், நட்பு எல்லாம் அஸ்திவாரத்தின் மீது கட்டப்படும் வீடு
அஸ்திவாரமாகிய காமமே தகர்ந்துவிட்டால், வீடு இடிந்துவிடும்..

அஸ்திவாரம் பலமாக இருக்கும்போதுதான் வீடு நன்றாக இருக்கும்

காதலில்லா காமம் நிலைப்பதில்லை
காமமில்லா காதல் இல்லவே இல்லை

அப்படி காமம் சுத்தமாக இல்லாத காதல், உண்மையில் காதல் இல்லை, அது வெறும் நட்புதான்

22 comments:

முகுந்தன் said...

//பெண் எளிதாக காதல்வயப்பட மாட்டாள்,
அப்படியே அவனை இழந்தாலும் மனதை எளிதாக மாற்றிக்கொண்டுவிடுவாள்//

//ஆனால் பெண் இயற்கையாகவே.. யாரிடம் தன்னை இழந்தாளோ, அவனிடம்தான் பாசம் இருக்கும்..//

இவை இரண்டும் முரண்பாடாக உள்ளதே?

Shwetha Robert said...

இவை இரண்டும் முரண்பாடாக உள்ளதே?
------------

may be!

ithu nan padichathai post aa potein,so no vilakkam from myside:))

முகுந்தன் said...

I understood that , but thought of sharing with you.

Shwetha Robert said...

முகுந்தன் said...
I understood that , but thought of sharing with you.

--------------

thanks for sharing your thoughts:-)

Vijay said...

\\அப்படி காமம் சுத்தமாக இல்லாத காதல், உண்மையில் காதல் இல்லை\\
Very bold thoughts :)

இசைச்செல்வன் said...

// பெண் திருமணத்திற்கு பிறகுதான் கணவனோடு மிகவும் பாசமோடு இருக்கிறாள்.. ஆனால் திருமணத்திற்கு பின் ஆணின் கேஸ் உல்டா ஏன் திருமணதிற்கு பிறகு ஆண்கள் முன்பு மாதிரி அன்பை பொழிவதில்லை? //


இதுக்கு ஒரே காரணம் சரியான புரிதல் இல்லாததே.

காதலர்கள் பேசும்போது தங்களைவிட மற்றவர்களைப்பற்றி அதிகமாக பேசுகிறார்கள், அதனாலதான் காதல் இனிக்கிறது. கொஞ்சம் யோசிச்சுபருங்க .....

Shwetha Robert said...

விஜய் said...
\\அப்படி காமம் சுத்தமாக இல்லாத காதல், உண்மையில் காதல் இல்லை\\
Very bold thoughts :)

--------------

thanks Vijay:-)))

Shwetha Robert said...

இசைச்செல்வன் said...
// பெண் திருமணத்திற்கு பிறகுதான் கணவனோடு மிகவும் பாசமோடு இருக்கிறாள்.. ஆனால் திருமணத்திற்கு பின் ஆணின் கேஸ் உல்டா ஏன் திருமணதிற்கு பிறகு ஆண்கள் முன்பு மாதிரி அன்பை பொழிவதில்லை? //


இதுக்கு ஒரே காரணம் சரியான புரிதல் இல்லாததே.

காதலர்கள் பேசும்போது தங்களைவிட மற்றவர்களைப்பற்றி அதிகமாக பேசுகிறார்கள், அதனாலதான் காதல் இனிக்கிறது. கொஞ்சம் யோசிச்சுபருங்க .....

-----------

yosichu parthein, neenga sonathu correct than :)

FunScribbler said...

//இந்த ஹார்மோன்கள் எல்லாம் கலந்து செய்யும் கலகம்தான் மனிதனை காதல் ..கீதல் ...என்று பிதற்ற வைக்கிறது//

yes true true!! ஜே ஆஞ்ஜநயா!! (நான் அவர் பக்தன்..மெய்யாலுமா!) ஹிஹி..

FunScribbler said...

//அஸ்திவாரம் பலமாக இருக்கும்போதுதான் வீடு நன்றாக இருக்கும்//

u mean basement strong, building weak. நம்ம வடிவேலு சொன்ன மாதிரில இருக்கு!

Shwetha Robert said...

Thamizhmaangani said...
//இந்த ஹார்மோன்கள் எல்லாம் கலந்து செய்யும் கலகம்தான் மனிதனை காதல் ..கீதல் ...என்று பிதற்ற வைக்கிறது//

yes true true!! ஜே ஆஞ்ஜநயா!! (நான் அவர் பக்தன்..மெய்யாலுமா!) ஹிஹி..

-------------

guruvey gayathryyyy,ungaloda seri thamasha iruku:))

Shwetha Robert said...

Thamizhmaangani said...
//அஸ்திவாரம் பலமாக இருக்கும்போதுதான் வீடு நன்றாக இருக்கும்//

u mean basement strong, building weak. நம்ம வடிவேலு சொன்ன மாதிரில இருக்கு!

-----------------

iyayo.......ipdi ellam ketta enna solrathu :))

Ramya Ramani said...

//பெண் எளிதாக காதல்வயப்பட மாட்டாள்,
அப்படியே அவனை இழந்தாலும் மனதை எளிதாக மாற்றிக்கொண்டுவிடுவாள்//

இதில் எனக்கு உடன்பாடு இல்லை! பெண் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டாள்,ஆண்களை போல் தாடி எல்லாம் வைத்துக்கொண்டு :(

//பெண் திருமணத்திற்கு பிறகுதான் கணவனோடு மிகவும் பாசமோடு இருக்கிறாள்..//

கணவனிடம் கிடைக்கும் பாதுகாப்பு உணர்வினாலோ!!

தமிழன்-கறுப்பி... said...

//காமம்! இது ஒரு சக்தி. வாழ்க்கைச் சக்தி. இயற்கையானது.
ஆனந்தமானது அனுபவிக்க. ஒரு பாவமும் அறியாதது.
ஒரு தவறும் இதில் இல்லை.
வாழ்க்கை இருப்பதும் வளர்வதும்
காமம் என்ற அடிப்படைச் சக்தியினால்.
நாம் காமத்தால் பிறந்தவர்கள்.
நம் ஒவ்வொரு அணுக்களிலும்
காமம் சக்தியாக உள்ளது.//


நானும் எங்கேயோ படிச்சதிலிருந்துதான் எழுதியிருக்கிறேனுங்க...

தமிழன்-கறுப்பி... said...

என்னங்க நீங்க பெரிய பெரிய விசயமெல்லாம் படிக்கச்சொல்லி எங்களை கஷ்டப்படுத்துறிங்க...:(

தமிழன்-கறுப்பி... said...

என்னங்க நீங்க பெரிய பெரிய விசயமெல்லாம் படிக்கச்சொல்லி எங்களை கஷ்டப்படுத்துறிங்க...:(

தமிழன்-கறுப்பி... said...

///காதல்; (love) என்பது கடவுள் தன்மை (godliness) அல்லது
காதல் என்பது உண்மை (truth) என ஓசோ கூறுகின்றார்.
காதல்; கண்டவர் கடவுளை அல்லது உண்மையைக் கண்டவர்
என்பது அவரது அனுபவம்.
இவர் தன் பெரும்பான்மையான சொற்பொழிவுகளில்
மனிதரில்; காதல் உணர்வை வளர்ப்பது எவ்வாறு?
அதன் நன்மைகள் என்ன? காதல் எவ்வளவு உயர்வானது,
என்பது தொடர்பாகவே கூறியுள்ளார். இதற்கு காரணம்,
காதல் இல்லாத ஒரு வாழ்வை
ஒருவரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாதளவு கசப்பானது///

இதுவும் எங்கேயோ படிச்சதிலிருந்துதான் எழுதியிருக்கிறேனுங்க...

Shwetha Robert said...

Ramya Ramani said...
//பெண் எளிதாக காதல்வயப்பட மாட்டாள்,
அப்படியே அவனை இழந்தாலும் மனதை எளிதாக மாற்றிக்கொண்டுவிடுவாள்//

இதில் எனக்கு உடன்பாடு இல்லை! பெண் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டாள்,ஆண்களை போல் தாடி எல்லாம் வைத்துக்கொண்டு :(

//பெண் திருமணத்திற்கு பிறகுதான் கணவனோடு மிகவும் பாசமோடு இருக்கிறாள்..//

கணவனிடம் கிடைக்கும் பாதுகாப்பு உணர்வினாலோ!!

---------------

correct correct points aa solreenga Ramya Ramani:)

Shwetha Robert said...

தமிழன்... said...
என்னங்க நீங்க பெரிய பெரிய விசயமெல்லாம் படிக்கச்சொல்லி எங்களை கஷ்டப்படுத்துறிங்க...:(

----------

nan engayo padichathu thanga post poten,neengalum padichu kashta padanumnu nalla yennathula kandipa illa:)

Shwetha Robert said...

தமிழன்... said...
///காதல்; (love) என்பது கடவுள் தன்மை (godliness) அல்லது
காதல் என்பது உண்மை (truth) என ஓசோ கூறுகின்றார்.
காதல்; கண்டவர் கடவுளை அல்லது உண்மையைக் கண்டவர்
என்பது அவரது அனுபவம்.
இவர் தன் பெரும்பான்மையான சொற்பொழிவுகளில்
மனிதரில்; காதல் உணர்வை வளர்ப்பது எவ்வாறு?
அதன் நன்மைகள் என்ன? காதல் எவ்வளவு உயர்வானது,
என்பது தொடர்பாகவே கூறியுள்ளார். இதற்கு காரணம்,
காதல் இல்லாத ஒரு வாழ்வை
ஒருவரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாதளவு கசப்பானது///

இதுவும் எங்கேயோ படிச்சதிலிருந்துதான் எழுதியிருக்கிறேனுங்க...

-------

hai tamilan,

thanks for sharing what you have read about lust in love:))

ஜி said...

Naanum pala questionoda vanthen....

//ithu nan padichathai post aa potein,so no vilakkam from myside:))//

Itha padichathum freeya vitutten :)))

கருணாகார்த்திகேயன் said...

// ஆனால் பெண் இயற்கையாகவே.. யாரிடம் தன்னை இழந்தாளோ, அவனிடம்தான் பாசம் இருக்கும்.. //

அது என்ன " இழந்தாளோ"..
காதலும் , காமமும் குடுக்கல், வாங்கல் இல்லை

பதிவு நல்ல இருந்தது...

என்றும் அன்புடன்
கருணா கார்த்திகேயன்